20 மாதங்களில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட் -19 தரவுகளில் நீடிக்கும் இடைவெளிகள்

தன்னார்வலர்களால் இயக்கப்படும், திரள் ஆதாரமான முயற்சியான covid19india.org, இந்தியாவுக்காக பிரிக்கப்படாத, வரலாற்று மற்றும் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஒரே கோவிட் -19 தரவு, அக்டோபர் 31, 2021 அன்று செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது, மத்திய மற்றும் பெரும்பாலான மாநிலங்கள், சிறு கோவிட் -19 தரவைக்கூட தெரிவிக்க வேண்டாம்.

20 மாதங்களில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட் -19 தரவுகளில் நீடிக்கும் இடைவெளிகள்
X

சென்னை: பெருந்தொற்று தொடங்கி ஒன்றரை வருடங்களாகிவிட்ட நிலையில், அத்துடன் இந்தியாவின் ஒரே தேசிய அளவிலான பிரித்தெடுக்கப்படாத கோவிட்-19 தரவு தளம் செயல்படுவது நிறுத்தப்படுவதர்கு இரண்டு மாதங்களே உள்ள சூழலில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட் தரவு தேவைப்படுகிறது.

புதிய வெளியிடப்பட்டாத ஆய்வு ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு, வயது மற்றும் பாலின விநியோகம் ஐந்தில் ஒரு கோவிட் -19 தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகள், அத்துடன் இந்தியாவில் பதிவாகும் மூன்றில் ஒரு இறப்புக்கும் குறைவானதற்கு, நாள்பட்ட நோய் விநியோகமே என்று, ஜூன் 2021 ஆரம்பத்தில் மதிப்பிடுகிறது.

ஸ்டான்போர்ட் இன்ஸ்டிடியூட் ஃபார் கம்ப்யூஷனல் & கணித இன்ஜினியரிங் ஆராய்ச்சியாளர்களும், புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் நோய் இயக்கவியல், பொருளாதாரம் & கொள்கை மையத்தின் ஆராய்ச்சியாளர்களுமான வருண் வாசுதேவன் மற்றும் அபேநாய ஞானசேகரன் ஆகியோர், மே 22 மற்றும் ஜூன் 5, 2021 க்கு இடையில் கோவிட் -19 கண்காணிப்பு, தடுப்பூசிகள் மற்றும் படுக்கை கிடைப்பது பற்றிய தகவல் தெரிவிக்கும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் 100-க்கும் மேற்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் டிஜிட்டல் தளங்கள் மதிப்பீடு செய்தனர். வாசுதேவன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரின், இந்தியாவின் கோவிட் -19 செய்தி அறிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்த இரு முந்தைய ஆவணங்களை, இந்த ஆய்வு உருவாக்குகிறது.

உறுதிசெய்யப்பட்ட, இறந்த, மீண்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தீவிர நிலை/ஐசியு (தீவிர சிகிச்சை பிரிவு) கோவிட் -19 நோயாளிகள் குறித்து கிடைப்பது, அணுகல், சிறுகுறிப்பு மற்றும் தனியுரிமை மீறல்களை உள்ளடக்கிய 45 கண்காணிப்பு குறிகாட்டிகளில், ஆராய்ச்சியாளர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவுகளை ஆய்வு செய்தனர். தற்போது அதிக கோவிட் -19 தரவுகளை வழங்கும் மத்திய அரசு தளமான மைகோவ் (MyGov), மாவட்டங்கள், வயது, பாலினம் அல்லது நாள்பட்ட நோய் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட தரவு போன்ற சிறு தகவல்களை வழங்கவில்லை என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆண்டு ஏப்ரலில், 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பிரதமருக்கு கடிதம் எழுதினர். அதில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட பரிசோதனை மற்றும் மருத்துவத்தரவை அணுக அனுமதிக்கும்படி கோரினார்கள், ஆனால் அந்த தரவு, இன்னமும் உறுதியான சுவற்றுக்குள் தான் உள்ளது. இந்த தரவு இல்லாமல், விஞ்ஞானிகள், வைரஸ் மற்றும் அதற்கு எதிரான நோயெதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சி தடைபட்டுள்ளதாக கூறினார். வழக்குகள் மற்றும் இறப்புகள் பற்றிய பிரிக்கப்படாத தரவு இல்லாதது, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ஒப்பீடுகளை கடினமாக்கியுள்ளது.

"மை கவ் (MyGov) என்பது குடிமக்கள் வந்து செல்லும் தளமாகும், இது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால், நமக்கு வழங்கப்பட்ட தரவை தெரிவிக்கிறது. சில மாநிலங்கள், பிரிக்கப்படாத தரவுகளைக் கொண்டிருந்தாலும், எல்லா தரவையும் நாம் களத்தில் இருந்து சேகரிக்க முடியாது-நாம் ஒரே மூலத்தைப் பின்பற்ற வேண்டும்,"என்று மைகோவ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சிங், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

மாநிலங்களை பொருத்தவரை நாகாலாந்து ஒட்டுமொத்த கோவிட் -19 தொற்றுகள் மற்றும் வயது மற்றும் பாலினத்தால் பிரிக்கப்படாத இறப்புகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பிரிக்கப்படும் ஒட்டுமொத்த இறப்புகளை, அதன் வாராந்திர செய்தித் தொகுப்புகள் மூலம், அதிக எணிக்கையை பெற்றது. "இது, தலைமைச் செயலாளர் தலைமையிலான முழு அரசின் அணுகுமுறை" என்று, நாகாலாந்தின் முதன்மைச் செயலாளர் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்) அமர்தீப் சிங் பாடியா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். இந்தத் தரவுகளைத் தயாரிக்கும் திறன் அரசுக்குள் இருந்தது. "ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டக் குழுவும், தகவல் தொழில்நுட்பத் துறையும் இதில் இணைந்து செயல்படுகின்றன" என்று பாடியா கூறினார். வேறு சில மாநிலங்கள் இந்தத் தரவைச் சேகரித்த போதும், பொதுமக்களுக்கு தெரிவிக்காத நிலையில், நாகாலாந்து அரசு அப்படி ஒருபோதும் பரிசீலிக்கவில்லை என்று, பாட்டியா கூறினார்.

நாகாலாந்துக்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் ஒடிசா ஆகியன, சிறந்த கோவிட் -19 கண்காணிப்பு அறிக்கையை வழங்குகின்றன. இதற்கு மாறாக, டெல்லி, கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மிகக்குறைந்த எண்ணிக்கை உள்ள மாநிலங்கள், சிறு அளவிலான தரவு வைத்திருக்கவில்லை அல்லது இல்லை. தெலுங்கானா போன்ற மாநிலங்கள் மாவட்டங்கள் வாரியாக வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளை வழங்குவதில்லை. இதற்கிடையில்,உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார், கோவிட் -19 தரவை வெளியிட அதிகாரப்பூர்வ வலைத்தளங்களை கொண்டிருக்கவில்லை.


சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் CoWIN தகவல் பலகையில், தடுப்பூசியை பொருத்தவரை, ஒவ்வொரு டோஸுக்கும் தகுதி அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி விவரங்கள் குறிப்பிடவில்லை என்பதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், மற்றும் தீவிர மற்றும் மோசமான பாதகமான நிகழ்வுகளின் எண்ணிக்கையை (AEFI), நோய்த்தடுப்புக்குப் பிறகு தனித்தனியாக அல்லது தடுப்பூசி வகையால் பிரிக்க முடியாது. மாநில அளவில், 36 மாநிலங்களில் 14 மாநிலங்கள் மட்டுமே ஒவ்வொரு டோஸுக்கும் தகுதி வகையால் வகுக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளை தெரிவிக்கின்றன. கடுமையான மற்றும் தீவிர மற்றும் மோசமான பாதகமான நிகழ்வுகளின் எண்ணிக்கையை, தொற்றாளர்களின் எண்ணிக்கையை தனித்தனியாக அறிவிக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே.


படுக்கை வசதி கிடைப்பதை பொருத்தமட்டில், 36 மாநிலங்களில் 20, மற்றும் யூனியன் பிரதேசங்கள் மருத்துவமனை மூலம் இதை தெரிவிக்கின்றன, மேலும் அடிக்கடி தரவைப் புதுப்பிக்கின்றன, அதே நேரத்தில் மற்ற மாநிலங்கள் காலியான படுக்கை கிடைப்பது தொடர்பான எந்த தரவையும் வெளியிடவில்லை அல்லது மொத்த/காலியான படுக்கைகளின் எண்ணிக்கையை வகைப்படுத்தாமல் தெரிவிக்கின்றன.


மேலும், கோவிட் -19 தரவை தெரிவிக்கும் சில மாநிலங்கள், பின்னோக்கிய சிஅல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கர்நாடகா, 2020 ல் சிறந்த கண்காணிப்பு பதிவுகளை கொண்ட மாநிலம், தொற்று பாதித்தவர்களுக்கான வயது மற்றும் பாலின தரவுகளைக் கொண்ட "வார்-ரூம் அறிவிப்புகளை" இனி வெளியிடாது என்றது. எவ்வாறாயினும், பத்திரிகைகள் மற்றும் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில் இந்த செய்திகள் கிடைக்கின்றன என்பதை, இந்தியாஸ்பெண்ட் கண்டறிந்துள்ளது. "வார் -ரூம் உடன் தொடர்புடைய சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்பை விட அதிக வளங்கள் உள்ளன, ஆனால் கவனிப்பு மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துவதில் குறைவான முதலீடு உள்ளது,"என்று, வார் ரூம் தொடர்புடைய அதிகாரி, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். இதற்கிடையில், கேரளா, இறப்புகளுக்கான நாள்பட்ட நோய் விவரங்களை தெரிவிப்பதை நிறுத்தியது, அதே நேரத்தில் ஆரம்ப மாதங்களில் சிறு தரவை தெரிவித்து வந்த ஜார்க்கண்ட், இரண்டாவது அலை தாக்கிய பிறகு வயது மற்றும் பாலினத் தரவுகள் வெளியீட்டை நிறுத்தியது.

அத்தியாவசிய தரவு ஒருபுறம் இல்லாத நிலையில், சண்டிகர் மற்றும் ஹரியானா உட்பட பல மாநிலங்கள், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தரவை, தொற்றுநோயியல் நோக்கத்திற்கு சேவை செய்யவில்லை. இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு குறித்து நிதி ஆயோக்கின் சமீபத்திய வெள்ளை அறிக்கை, தனியுரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மாநிலங்கள் அல்லது மாவட்டங்கள் பகிரங்கப்படுத்த வேண்டிய தரவுகள் தொடர்பாக, தேசிய அளவிலான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தினர். எவ்வாறாயினும், தரவு வெளியீடு குறித்த தற்போதைய தேசிய வழிகாட்டுதல்கள், ஆவணங்களில் உள்ளன; இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், உலக சுகாதார அமைப்பின் கோவிட் -19 இறப்புகளை பதிவு செய்வதற்கான குறியீடு உட்பட, எந்த மாநிலமும் அதன் வெளியிடப்பட்ட தரவுகளில் சந்தேகத்திற்கிடமான கோவிட் -19 மரணத்தை சேர்க்கவில்லை என்று, இந்த வழிகாட்டுதல்களை எழுதிய தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பிரசாந்த் மாத்தூர், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

விரைவில் வெளியாகக்கூடிய அறிக்கையானது, தன்னார்வலர்களால் இயக்கப்படும் அரசு சாரா முயற்சியான, covid19india.org தளத்தின் இந்தத் தரவு இடைவெளிகளை காட்டியுள்ளது, இந்தியாவிற்கான பிரிக்கப்படாத, வரலாற்று மற்றும் பதிவிறக்கம் செய்யக்கூடிய கோவிட் -19 தரவின் ஒரே ஆதாரமான இந்த இணையதளம், அக்டோபர் 31, 2021 முதல் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தது. சமூக ஊடகங்களின் புரட்சிக்கு பின்னர், குறைந்தது இரண்டு அரசு நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு தொடர்பான தொடர்பில் இருந்துள்ளதாக, பெயர் வெளியிட விரும்பாத குழு உறுப்பினர் ஒருவர், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார், ஆனால் உறுதியான எதுவும் இன்னும் இல்லை என்றார் அவர்.

"நாம் covid19india.org ஐ மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது. சில தகவல்கள் அரசிடம் இருந்து சுயாதீனமாக இருப்பது நல்லது" என்று சிங் கூறினார்.

(புனே கோகலே இன்ஸ்டிடியூட்டில் பொருளாதார மாணவர்கள் தேவாங்கி ஹால்டர் மற்றும் கந்தர் ஜோஷி ஆகியோர், இந்தக் கட்டுரைக்கான ஆராய்ச்சிக்கு உதவி புரிந்துள்ளனர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை
respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story