கர்ப்பிணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவதை இந்தியா ஏன் தாமதப்படுத்தக்கூடாது

கர்ப்பிணிகள், குறிப்பாக மூன்றாவது மூன்று மாதங்களில் இருப்பவர்கள், அல்லது நோய்பாதிப்புடன் கூடியவர்கள், கோவிட் -19 தொற்றினால் சிக்கல்கள் மற்றும் இறப்புக்கான அதிக ஆபத்தில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, அவர்கள் தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தடுப்பூசியின் நன்மைகளானது, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அபாயங்களை விட மிக அதிகம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவதை இந்தியா ஏன் தாமதப்படுத்தக்கூடாது
X

மும்பை: கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் ஒன்றியத்தில், ஏப்ரல் 2021 இல் நடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது, உதவி ஆசிரியரான கல்யாணி அக்ராஹரி (27), தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டார். தனது முதல் குழந்தையுடன் எட்டு மாத கர்ப்பிணியாகவும், தனது மருத்துவரால் படுக்கையில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்ட கல்யாணி, தனது வீட்டில் இருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ள வாக்கெடுப்பு சாவடியில், 12 மணி நேர கடமையை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

மாவட்ட நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது மட்டுமல்லாமல், அவர் வேலைக்கு செல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தியது. நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த வேலைக்கு நியமிக்கப்பட்ட கல்யாணிக்கு, வேலைக்கு செல்லவதற்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை.


உத்தரப்பிரதேசத்தின், ஜான்பூரைச் சேர்ந்த பள்ளி உதவி ஆசிரியரும், 8 மாத கர்ப்பிணியுமான கல்யாணி அக்ராஹரி, அவரது மருத்துவரால் படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார், ஆனால் வீட்டில் இருந்து 32 கி.மீ தூரத்தில் தேர்தல் பணிக்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.

தேர்தல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று அவர் கடிதம் எழுதியபோதும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அத்துடன், வேலைக்கு அவர் வரவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டார். தொற்றின் முதல் அறிகுறிகள் தெரிய வந்த ஒன்பது நாட்களில், தனது மூன்றாவது திருமண நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்தார்.

புகைப்படம், கல்யாணி அக்ஹாரியின் குடும்பத்தினர் வழங்கியது

ஏப்ரல் 15 மாலை, அவர் வாக்குச்சாவடியில் இருந்து வீடு திரும்பியபோது, ​​காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டது. அவரது உடல் வெப்பநிலை மூன்று நாட்கள் குறையாதபோது, ​​அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர். இலவச படுக்கைகள் இல்லை என்று கூறி, எட்டு மருத்துவமனைகளால் அவர் நிராகரிக்கப்பட்டார். இதற்கிடையில், அவர் கோவிட் -19 நேர்மறை இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்தது. இறுதியாக ஜான்பூரில் உள்ள மஹிலா சிகிச்சாலயாவில் (மகளிர் மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டார். தனது மூன்றாவது திருமண தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 24 அன்று அவர் இறந்தார்.

"ஜூன் 10ம் தேதி, அவரது பிரசவ தேதியாக இருந்திருக்க வேண்டும், தீதி அதற்கு மிகவும் முன்பே இறந்துவிட்டார்" என்று அவரது தங்கை ராணி அக்ராஹரி, 22 இந்தியாஸ்பெண்டிடம் கண்ணீர்மல்க தெரிவித்தார். கல்யாணியின் உடல் நிலை மோசமான நிலை இருந்தபோதும் கூட, பணியில் சேரும்படி நிர்வாகம் அவரை நிர்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது, அவரது தந்தை சுரேஷ்குமார் கூறுகையில், கல்யாணி தனது கர்ப்பத்தின்போது சோர்வு இருந்ததை தவிர்த்து, நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகவும், அதற்காக அவர் மருந்து எடுத்து வந்தார் என்றும் கூறினார்.

அதே மாதத்தில், டெல்லியைச் சேர்ந்த பல் மருத்துவரான டிம்பிள் அரோரா சாவ்லா, 34, ஏழு மாத கர்ப்பிணியாகவும், கோவிட் நேர்மறை உள்ளவராகவும் இருந்தார், 10 நாட்கள் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவரது ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கியபோது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ரெமெடிவிர் மற்றும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றும் அவசரகால அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் குழந்தை இறந்து பிறந்தது, மறுநாள் 3 வயது மகனுக்கு தாயான டிம்பிள் இறந்தார்.

சாவ்லா, கோவிட் முன்னெச்சரிக்கைகள் குறித்து குறிப்பாக இருந்தார், ஒருபோதும் முகக்கவசம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெளியே சென்றதில்லை. ஒவ்வொரு 3-4 மாதங்களுக்கும் தொற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வார் என்று, அவரது கணவர் ரவிஷ் சாவ்லா, இங்கிலாந்தை சேர்ந்த தி இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு தெரிவித்தார். சாவ்லா இறந்த பின்னர், அவர் கணவர் வெளியிட்ட நோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கான ஒரு வீடியோவில், வைரஸை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள் என்று, மக்களை அவர் வற்புறுத்துவதைக் காணலாம்.

தொற்றுநோயின் இரண்டாவது அலை, கர்ப்பிணி பெண்களை முதல் அலையைவிட மிகவும் கடுமையாக பாதித்துள்ளது, மேலும் தாய்மார் மத்தியில் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று நாடு முழுவதும் நாங்கள் பேட்டி கண்ட மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறியல் நிபுணர்கள் தெரிவித்தனர். அவர்கள் பாதிப்புக்குள்ளான போதிலும், இந்தியாவின் தடுப்பூசி கொள்கை கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்கவில்லை, இது மாற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். கோவிட்டில் இருந்து வரும் அபாயங்கள், தடுப்பூசிகளில் இருந்து வரும் அபாயங்களை விட மிக அதிகம், இதுபற்றி பின்னர் விவரிக்கிறோம்.

கர்ப்ப காலத்தில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் 50% க்கும் அதிகமானவர்கள் குறைப்பிரசவம் மற்றும் காய்ச்சல் போன்ற சிக்கல்களை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது, தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் இறப்பு ஆபத்து அதிகம் என்று, ஏப்ரல் 2021 இல் வெளியிடப்பட்ட ஜமா பீடியாட்ரிக்ஸ் இதழில், இன்டர்கோவிட் ஆய்வு முடிவு கூறியது. 18 நாடுகளில் 2,100 கர்ப்பிணி பெண்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், கோவிட் (1.6%) உள்ள பெண்களிடையே தாய் இறப்பு குறைவாக இருந்தாலும், பாதிக்கப்படாத பெண்களை விட அவர்கள் இறப்பதற்கு 22 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட இருதய மற்றும் சுவாச நோய் போன்ற முன்பே இருக்கும் நிலைமைகள் கர்ப்பிணிப் பெண்களிடையே கோவிட் சிக்கல்களை மோசமாக்கியது.

'இரண்டாவது அலைகளில் கோவிட் காரணமாக தாய் இறப்பு நான்கு மடங்கு அதிகம்'

இன்டெர்கோவிட் ஆய்வின் கண்டுபிடிப்புகள், அமெரிக்காவில் உள்ள 703 சுகாதார மையங்களின் ஆய்வுக்கு ஏற்ப உள்ளன, இது பிரசவத்தில் கோவிட் நோயறிதலுடன் கூடிய பெண்களிடையே இறப்பு ஆபத்து, பாதிக்கப்படாதவர்களை விட 17 மடங்கு அதிகம் என்று கண்டறிந்துள்ளது. ஆய்வின்படி, ரத்தத்தில் நச்சுத்தன்மை ஆபத்து 14 மடங்கு அதிகமாகும், இயந்திர காற்றோட்டம் 13 மடங்கு, மற்றும் அதிர்ச்சி ஐந்து முறை.

இந்தியாவில் இந்த விஷயத்தில் உறுதியான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை, ஆனால் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இதேபோன்ற அபாயங்களை விவரிக்கும் சான்றுகள் இருப்பதை நாங்கள் கண்டோம்.

பிரசவத்தின் போது இறப்புகள் அரிதானவை மற்றும் அதன் காட்டி, தாய் இறப்பு விகிதம் 100,000 நேரடி பிறப்புகளுக்கு கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் தாய் இறப்பு விகிதம் 113 ஆகும், சமீபத்திய (2016-18) மாதிரி கணக்கெடுப்பு பதிவு முறைப்படி, 2007-09ல் 212 ஆகவும், 1999-2001 இல் 327 ஆகவும் குறைந்தது.

தொற்றின் முதல் அலைகளில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களை விட அதிக சிக்கலான நிகழ்வுகளைப் பதிவு செய்தனர், ஆனால் அவர்கள் வெற்றிகரமாக பிரசவித்ததாக, இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் (FOGSI) தலைவர் அல்பேஷ் காந்தி கூறினார். ஆனால் நடந்துகொண்டிருக்கும் இரண்டாவது அலையில், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இன்னும் தீவிரமாகிவிட்டது என்றார் அவர்.

ஏப்ரல் 2020 இல், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களின் பதிவையும், மே 2020 இல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்தது போல், கூட்டமைப்பு பதியத்தொடங்கியது. ஆனால் சுகாதார மையங்கள் அதிக பணிச்சுமையுடன் போராடி வருவதால் தரவு முழுமையடையவில்லை, பின்னர் சரியான எண்ணிக்கைகளை இணைக்கக்கூடிய நிலையில் அது இருக்காது என்று காந்தி கூறினார். "தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது, 2021 ஆம் ஆண்டில் கோவிட் -19 காரணமாக 7-8 மடங்கு அதிகமான பிரசவத்தில் தாய் இறப்பு, மற்றும் முதல் அலைகளை விட நான்கு மடங்கு அதிக இறப்பு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களிடையே நோய் தீவிரமடைவதற்கு ஒரு காரணம் என்னவென்றால், இந்தியாவில் இரண்டாவது அலை, முதல் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது (மே 2021 இல் 400,000 புதிய வழக்குகளுடன் உச்சபட்சமாக இருந்தது), (செப்டம்பர் 2020 இல் 97,000 புதிய வழக்குகளுடன் உச்சபட்சமாக இருந்தது), இது நாட்டின் இளைய மக்கள் தொகை அடங்கும்.

எவ்வாறாயினும், அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிக்கல்கள் அல்லது பாதகமான விளைவுகள் ஏற்படாது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம் என்று கூறும் டெல்லியைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் ரூமா சாட்விக், ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மையத்தில் பணிபுரிகிறார். "சுமார் 80% கர்ப்பிணிப் பெண்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான அறிகுறிகளுடன் இருப்பார்கள்" என்று சாட்விக் கூறினார்.

கர்ப்பம், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது, மூன்றாவது மூன்று மாதங்கள் ஆபத்தானவை

கர்ப்பம் என்பது, ஒரு சூழலாக, உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது, ஏனெனில் அது தொடங்குவதற்கு கருவையே ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார் சாட்விக். சாதாரண காலங்களில், ரத்தக்கசிவு அல்லது கட்டுப்பாடற்ற ஹெபடைடிஸ் காரணமாக அதிகப்படியான இரத்த இழப்பு காரணமாக பெரும்பாலான பிரசவத்தில் தாய் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் இப்போது மிதமான முதல் கடுமையான நோயுள்ள கர்ப்பிணிப் பெண்கள் கோவிட் அறிகுறிகளும் நிமோனியாவை எதிர்கொள்க்வதாக, அவர் கூறினார்.

இரண்டாவது அலைகளில் பெரும்பாலான சிக்கல்கள் மூன்றாவது மூன்று மாதங்களில் தெரிவிக்கப்படுகின்றன, ஏனெனில், கர்ப்பம் முன்னேறும்போது, ​​கருப்பை மேல்நோக்கி விரிவடைந்து, உதரவிதானத்திற்கு எதிராகத் தள்ளுகிறது, இது நுரையீரலின் திறனைக் குறைக்கிறது என்று அவர் கூறினார்.

"நிலைமை மிகவும் மோசமானது - முதல் அலையில், கேரளாவில் ஏழு பிரசவ தாய்மார்கள் மட்டுமே இறந்தனர். ஆனால் இம்றை இந்த எண்ணிக்கை 4-5 மடங்கு அதிகமாகும்" என்று, மூத்த மகப்பேறியல் நிபுணர் மற்றும் கேரள மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் கூட்டமைப்பு (KFOG) மேற்கொண்ட தாய்வழி இறப்பு தணிக்கை செயல்முறையான, தாய்மார் இறப்புகளின் ரகசிய மறுஆய்வுக்கான மாநில ஒருங்கிணைப்பாளரான வி.பி பெய்லி கூறினார்.

"நோய் பரவுதல் குறையும் போது, ​​பிரசவ தாய்மார்களின் இறப்புகள் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் இப்போது கூட அதன் அறிகுறிகளைக் காணவில்லை," என்று அவர் கூறினார். நோயின் தீவிரம் இந்த அலையில் அதிகமாக உள்ளது. "நுரையீரல் செயல்பாடு - இது ஆக்ஸிஜன் செறிவூட்டலை பாதிக்கும் விதம் - இந்த அலையில் அதிகம், இது முந்தைய அலைகளில் மிகவும் மிதமாக இருந்தது" என்றார்.

கடந்த தொற்று அலைகளுடன் ஒப்பிடும்போது ஐ.சி.யூ சேர்க்கை மற்றும் காற்றோட்டத்தின் அதிக தேவை உள்ள கர்ப்பிணிப் பெண்களிடையே கோவிட் மிதமான முதல் கடுமையான நிகழ்வுகளின் அதிக சம்பவங்களை மருத்துவர்கள் காண்கின்றனர் என்று ரூமா சாட்விக் கூறினார். அவர்களின் மையத்தில், கடந்த அலைகளில் கோவிட் தொடர்பான இறப்புகள் எதுவும் இல்லை, ஆனால் கடந்த மாதத்தில் ஒரு சில சம்பவங்கள் நடந்துள்ளன என்று அவர் கூறினார்.

தாமதமாக அல்லது பல கர்ப்பங்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை கோவிட் தொடர்பான சிக்கல்களுக்கான அபாயத்தை உயர்த்தாக, பெய்லி கூறினார்.

மும்பையில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான நகரத்தின் பரிந்துரை மையமான பி.ஒய். நாயர் மருத்துவமனையில், 33 பிரசவத் தாய்மார்களின் இறப்புகள் நிகழ்ந்துள்ளன, அவற்றில் 8-10 முதலாவது அலைகளிலும், மீதமுள்ளவை இரண்டாவது அலைகளிலும் நிகழ்ந்ததாக, மருத்துவமனையின் பேராசிரியரும் மகளிர் மருத்துவத்தலைவருமான கணேஷ் ஷிண்டே கூறினார். கடுமையான நுரையீரல் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்களில், பெரும்பாலானோர் இறந்துவிட்டனர், அவர்களைக் காப்பாற்றுவதற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றார்.

ஏப்ரல் 2020 முதல், இந்த மருத்துவமனை மையம் 1,059 பிரசவங்களை நடத்தியுள்ளது, மேலும் மிதமான முதல் கடுமையான நோயுள்ள 90 பெண்களுக்கு ஐ.சி.யூ பராமரிப்பு தேவை என்று ஷிண்டே கூறினார்.

முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட இன்டர்கோவிட் ஆய்வில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதைக் கண்டறிந்தது, பெரும்பாலும் குறைபிரசவ பிறப்பு காரணமாக, இது தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், அறிகுறியில்லாமல் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், பாதிக்கப்படாத கர்ப்பிணிப் பெண்களும் அதே ஆபத்தில் உள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி நன்மைகள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஆபத்தவிட அதிகம்

கோவிட் சுகாதார நெறிமுறைகளை -- இரட்டை முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கை கழுவுதல்-- கடைபிடிப்பது, பாதுகாப்பான கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும் என்று அல்பேஷ் காந்தி கூறினார். ஆனால் தடுப்பூசி இன்னும் பயனுள்ளதாக இருக்கும், இது அனுமதிக்கப்பட வேண்டும் என்று பெய்லி கூறினார்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கோவிட் தடுப்பூசிகளுக்கான எந்தவொரு மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாகவும் இல்லை, எனவே பெரும்பாலான நாடுகள் அவர்களை நோய்த்தடுப்பு இயக்கங்களில் இருந்து விலக்கி வைத்தன. அதிகமான தடுப்பூசி தகவல்கள் கிடைத்ததால் இது மாறிவிட்டது, மேலும் அதிகமான மருத்துவ அமைப்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போட பரிந்துரைத்தன. கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த மருத்துவ பரிசோதனைகளும் தற்போது நடந்து வருகின்றன.

தடுப்பூசிகள், அவற்றின் அடிப்படை வழிமுறையைப் பொறுத்தவரை, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தானவை அல்ல என்று நிபுணர்கள் நம்புகின்றனர். எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் (ஃபைசர், மாடர்னா) மற்றும் ஜான்சனின் வைரஸ் தடுப்பூசி ஆகியவற்றின் விலங்கு ஆய்வுகள் கர்ப்பிணி விலங்குகள் அல்லது அவற்றின் குழந்தைகளுக்கு கூடுதல் ஆபத்தை காட்டவில்லை. தடுப்பூசி போடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வி-பாதுகாப்பு பதிவேட்டை உருவாக்கியது. தடுப்பூசி போடப்பட்ட 3,958 பெண்கள் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளில் இருந்து கூடுதல் ஆபத்தை காட்டவில்லை என்று முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட் அல்லது பிற நோய் பாதிப்புள்ளவர்கள் என அதிக ஆபத்துள்ள பெண்களுக்கு, கோவிட் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

"தடுப்பூசிகளின் பாதகமான விளைவுகள் என்பது, கோவிட் நோயால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் மிகக் குறைவு. இந்த சூழ்நிலையில், அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், " என்று, கோவிட் தடுப்பூசிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்த, இன்னும் வெளியிடப்படாத ஆய்வின் முதன்மை ஆசிரியர் யாமினி சர்வால் கூறினார். புதுடெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் உள்ள வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரிகவும் இவர் உள்ளார்.

தடுப்பூசிகள், தாய் மற்றும் கரு இரண்டையும் பாதுகாக்கின்றன-- நோயெதிர்ப்புகள் மாற்றப்படுகின்றன -- கோவிட் தடுப்பூசி வழக்கமான பிறப்புக்கு முந்தைய நெறிமுறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது.

ஏப்ரல் 2021 இல் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு FOGSI பரிந்துரைத்ததும் இதுதான், தடுப்பூசிகளின் நன்மைகளானது, அதன் அபாயங்களை விட அதிகமாக இருப்பதைக் குறிப்பிடுகிறது.

மே 13, 2021 அன்று, நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி பரிந்துரைத்தது. ஆனால், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், பாலூட்டும் பெண்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட அனுமதித்தது, இது கர்ப்பிணிப் பெண்கள் மீதான முடிவை ஒத்திவைத்தது.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகளில் முன்னுரிமை தரும் அமெரிக்கா, இங்கிலாந்து

நாங்கள் மேலே மேற்கோள் காட்டிய ஆய்வில், அதிக கோவிட் சுமைகளைக் கொண்ட 20 நாடுகளில், ஒன்பது நாடுகள் மட்டுமே கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதை அனுமதித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளன, அதே நேரத்தில் பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, அர்ஜென்டினா, ஸ்பெயின், மெக்ஸிகோ மற்றும் நெதர்லாந்து ஆகியன தடுப்பூசி போட அனுமதித்த நாடுகளில் அடங்கும்.

இந்தியா, துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, போலந்து, கொலம்பியா, ஈரான், உக்ரைன், பெரு மற்றும் இந்தோனேசியா ஆகியன, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதை அனுமதிக்கவில்லை.

அதிக எண்ணிக்கையிலான குழந்தை மற்றும் தாய் இறப்பு விகிதங்களைக் கொண்ட 20 நாடுகளில், நான்கு மட்டுமே கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி அனுமதிக்கின்றன என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, அதிக கோவிட் சுமைகள் மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்தியாவும் இந்தோனேசியாவும், தற்போது வரை கர்ப்பிணிப் பெண்களை நோய்த்தடுப்பு திட்டங்களில் சேர்க்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 27 மில்லியன் இந்திய பெண்கள் கர்ப்பமாக உள்ளனர் என்று FOGSI இன் அல்பேஷ் காந்தி கூறினார். "அதிகமான கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க இந்திய அரசு விரைவில் இது குறித்து நல்லதொரு முடிவை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Next Story