தொற்றின் இரண்டாம் அலையில் நோயில்லாத இளைஞர்கள் அதிகளவில் பலி, தரவுகள்

மூன்று மாநிலங்கள் மட்டுமே கோவிட் -19 ஆல் இறந்தவர்களில் நோய் உள்ளவர்களின் தரவைப் பகிர்ந்து கொள்வதால், அதில் மொத்த இந்தியாவின் நிலை தெளிவாக இல்லை. கோவிட் -19 இறப்புகளில் அவற்றின் தாக்கத்தை அளவிடுவதற்கு, ஏற்கனவே நோயிருப்பது மற்றும் உருமாறிய வைரஸ் பரவல் ஆகிய இரண்டையும் பற்றிய தரவுகளை வெளிப்படுத்த வேண்டுமென்று, மாநிலங்களை மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

தொற்றின் இரண்டாம் அலையில் நோயில்லாத இளைஞர்கள் அதிகளவில் பலி, தரவுகள்
X

கொல்கத்தா: முதல் அலையின் உச்சத்தை விட மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் உச்சத்தின் போது, நோய் எதுவும் இல்லாத இளைஞர்கள் அதிகளவில் இறந்தனர் என்பதை, எங்கள் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இத்தகைய இறப்புகளில் பெரும்பாலானவர்கள், 60 வயதிற்குட்பட்ட நபர்கள்தான்.

நாள்பட்ட நோய் இல்லாமல் மரணம் நிகழ்வது என்பது கோவிட் -19 தொற்றினை குறிக்கிறது, அங்கு நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பெரிய சுகாதார பாதிப்பு இல்லாத ஒருவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு, பின்னர் காலமானார். இதன் பொருள் கோவிட் -19 தான் மரணத்திற்கு முக்கிய காரணம். நோய் பாதிப்பு இல்லாமல் இறந்தவர்கள் தொடர்பான தரவுகளை முறையாக வழங்கும் மூன்று முக்கிய மாநிலங்கள், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மட்டுமே.

நாடு முழுவதும் இரண்டாவது அலையின் தீவிரத்திற்கு, டெல்டா வைரஸ் அதிகளவில் பரவல் காரணம் என்று, மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நிதி ஆயோக் கூறினாலும், கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு அதிகரிப்பதில் இந்த உருமாறிய வைரஸின் பங்கை ஆராய, இது ஆதிக்கம் செலுத்தும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், பொதுவில் கிடைக்கக்கூடிய சான்றுகள் அதிகம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எந்தவொரு அடிப்படை நோயும் இல்லாத நபர்களின் இறப்புகளில் அவற்றின் தாக்கத்தை அளவிட, மாநிலங்களில் கோவிட் -19 வகைகளின் விகிதாச்சாரத்துடன் நோய் தொடர்பான தரவு வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, மேற்கு வங்கத்தில் இத்தகைய இறப்புகளின் அதிக பங்கில் டெல்டா உருமாறிய வைரஸ் பங்கு இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள மாறுபாடுகளின் விகிதம் தொடர்பான புள்ளிவிவரங்கள் தேவை, ஆனால் வெளியிடப்பட்ட வடிவத்தில் கிடைக்கவில்லை. மேலும், அதே டெல்டா உருமாறிய வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற பிற மாநிலங்கள், தங்கள் தினசரி கோவிட் -19 செய்தி அறிக்கைகளில் நோய் பாதிப்புடன் இறந்தவர்கள் தொடர்பான தரவை வெளியிடாது.

நோய் பாதிப்பு குறித்த தேசிய அளவிலான கோவிட் -19 தரவை வெளியிடுமாறு, சுகாதார அமைச்சகத்திற்கு மருத்துவர்கள் அழைப்பு விடுக்கின்றனர், அல்லது மாநிலங்களை தங்கள் அன்றாட கோவிட் செய்தி அறிக்கைகளை ஒரே மாதிரியாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள் மற்றும் இதுபோன்ற இறப்புகளில், ஏற்றம் இருப்பதை புரிந்துகொள்வதற்கு, உருமாறிய வைரஸ் பரவல் குறித்த புவியியல் பரவல் பற்றிய தரவு உதவும்.

தரவு

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த மொத்த கோவிட் -19 இறப்புகளில், நாள்பட்ட நோய் இல்லாமல் மக்கள் இறப்புகளின் பங்கு, இரண்டாவது அலைகளின் போது மூன்று மடங்கு அதிகரித்தது, ஏப்ரல்-மே 2021 முதல் தரவு, இரண்டாவது அலை உச்சம் அடைந்ததும், செப்டம்பர்-அக்டோபர் 2020 முதல் அலை உச்சத்தை எட்டியதும் வெளிப்படுத்துகின்றன.


தமிழ்நாட்டில், இரண்டாவது அலையின் போது 23.9% இறப்புகள் எந்தவொரு நோயும் இல்லாதவர்களுக்கு ஏற்பட்டது; இது, முதல் அலையின் போது 7.6% ஆக இருந்தது. மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இதன் பங்கு மேலும் 26.2% ஆக உயர்ந்தது.

மேற்கு வங்கத்தில், ஏப்ரல் மற்றும் மே 2021 இல் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நடந்த அனைத்து கோவிட் -19 இறப்புகளில் பாதிக்கும் மேலானவை எந்தவொரு நாள்பட்ட நோய் இல்லாதவர்களுக்கு நேரிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் 1, 2021 க்குள், மாநிலத்தில் நாள்பட்ட நோய் இல்லாத நோயாளிகளின் இறப்புகளின் பங்கு 16% ஆக இருந்தது. மே 31 க்குள், அது 28.3% வரை உயர்ந்தது.

இரண்டாவது அலைகளில், அடிப்படை நோய்இல்லாமல் கோவிட் -19 இறந்தவரின் பங்கில், கர்நாடகா 11 சதவீத புள்ளி அதிகரிப்பை பதிவு செய்தது, முதல் அலைகளில் 27.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இது 38.2 சதவீதமாக இருந்தது. மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அத்தகைய நோயாளிகளின் இறப்புகளின் பங்கு 40.2% ஆக அதிகமாக இருந்தது.

இளையோரின் பங்கு, தடுப்பூசி போடப்பட்டது, பின்னர் உயர்வு

மூன்று மாநிலங்களிலும், நாள்பட்ட நோய் இல்லாமல் இறந்தவர்களில் பெரும்பாலோர், 60 வயதுக்கு குறைவானவர்கள். கர்நாடகாவில், எந்தவிதமான நோயும் இல்லாமல் இறந்தவர்களில் 62% பேர், 60 வயதிற்குட்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இது, 80% வரை அதிகமாக இருந்தது. மேற்கு வங்கம் அதன் நாள்பட்ட நோய் தொடர்பான தரவுகளை வயது வாரியாகப் பகிர்ந்து கொள்ளவில்லை. எவ்வாறாயினும், இரண்டாவது அலைகளின் போது நோய் இல்லாமல் கோவிட் -19 இறப்புகளில் மேற்கு வங்காளத்தின் அதிக பங்கு 60 வயதிற்குட்பட்டவர்களிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான இறந்தவர்களால் ஏற்பட்டதாக, பல மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

மூன்று மாநிலங்களில், நாள்பட்ட நோய் நிலை இல்லாமல் கோவிட் -19 இறந்தவர்களில், 60 வயதிற்குட்பட்டவர்களின் பங்கு இரண்டாவது அலையின் போது உயர்ந்துள்ளது.


தமிழகத்தில், 2020 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கோவிட் -19 தொற்றால் இறந்தவர்களில் 71% பேர், 60 வயதுக்குக் குறைவானவர்கள். ஏப்ரல்-மே மாதங்களில் இது 80% வரை உயர்ந்தது.

கர்நாடகாவின் தரவு இதேபோன்ற போக்கை வெளிப்படுத்துகிறது. முதல் அலையின் உச்சத்தின்போது, நோய் இல்லாமல் இறந்தவர்களில் 48.6% பேர் 60 வயதிற்குட்பட்டவர்கள். இரண்டாவது அலையில், இது 62% வரை உயர்ந்தது.

நாள்பட்ட நோய்ச்சூழலில், மேற்கு வங்கம் வயது வாரியான தரவை பகிரவில்லை, ஆனால் நோய்இல்லாமல் மாநிலத்தின் அதிக பங்கு இறப்பு காரணமாக, வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது என்று மேற்கு வங்க மருத்துவர்கள் மன்றத்தின் தலைவர் அர்ஜுன் தாஸ்குப்தா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"தொற்றின் இரண்டாவது அலையில், இளையவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தாஸ்குப்தா கூறினார். "இது நிச்சயமாக தடுப்பூசி மூலம் இதை செய்ய வேண்டும். வயதானவர்கள் தடுப்பூசியின் ஒன்று அல்லது இரண்டாம் டோஸ்களை பெற்றனர், மேலும் அவை பாதுகாப்பாக இருந்தன. அதனால்தான், எங்களது டாக்டர் மன்றத்தின் சார்பாக, அரசிடம் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மூன்றாவது அலை தாக்கும்போது ஒரு பேரழிவு அனுபவத்தைத் தடுக்க, தடுப்பூசியை ஒரு ஆயுதமாக ஈடுபடுத்த வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்" என்றார்.

மேற்கு வங்கத்தில் நோய் பாதிப்பு இல்லாமல் மரணத்தின் அதிகரிப்பு இரண்டாவது அலையின் போது, இளைய மக்களை அதிகம் தாக்கியதால் தோன்றியது என்று, கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனைகளில் தொற்று நோய் நிபுணர் சயன் சக்ரவர்த்தி ஒப்புக்கொண்டார். "இளைஞர்களுக்கு, பொதுவாக மூத்த குடிமக்களை விட குறைவான நோய்பாதிப்பு உள்ளன," என்று அவர், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "வயதானவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி போடுகிறார்கள், அதே நேரத்தில் இளைய மக்கள் அதிக நடமாட்டம் மற்றும் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

நாடு முழுவதும், முதல் அலையுடன் ஒப்பிடும்போது இரண்டாவது அலைகளில் 21 முதல் 50 வயதுடையவர்கள் மத்தியில், கோவிட் -19 தொற்று, மூன்று சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே வழக்குகளில் சமமான குறைவு ஏற்பட்டுள்ளது.


60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள், மற்றும் குறிப்பிட்ட நோயுள்ள 45 முதல் 59 வயதுடையவர்களுக்கு மார்ச் 1, 2021 அன்று தொடங்கியது; ஏப்ரல் 1 அன்று 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும்; மே 1 அன்று 18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 31 க்குள், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 முதல் 45 வயதுடையவர்கள் முறையே 19.7% மற்றும் 22.2% பேர் தடுப்பூசி போடப்பட்டனர். தமிழ்நாட்டில், இந்த வயதினருக்கான விகிதம் 33% ஆகும்.


ஜூன் 22 க்குள், மொத்த தடுப்பூசிகளில் 18 முதல் 45 வயதுடையவர்களின் பங்கு, கர்நாடகாவில் 35.8%, மேற்கு வங்கத்தில் 29% மற்றும் தமிழகத்தில் 45.3% என கோவிட் 19 இந்தியா தெரிவித்து இருந்தது.

உருமாறிய டெல்டா வைரஸ் பங்கு குறித்து வெளிப்படையாக கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் இல்லை

கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் சார்ஸ்-கோவ்-2 வைரஸின் உருமாறியதான டெல்டா (B.1.617.2) வைரஸ் அதிக பரவுதலே இரண்டாவது அலையில் தீவிரத்தை ஏற்படுத்தியதாக, மத்திய அரசு கூறியுள்ளது. "இரண்டாவது அலையின் போது, ​​டெல்டா வைரஸ் உருமாற்றம் - B .1.617.2 அதன் விளைவை வெளிப்படுத்தியது; அலைகளை தீவிரமாக்குவதில் அதன் அதிக பரவல்தன்மை முக்கிய பங்கு வகித்தது," என்று நிதி ஆயோக்உறுப்பினர் (சுகாதாரம்), வி.கே. பால், ஜூன் 16 அன்று கூறினார்.

மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகியன, தங்களது மாநிலங்களில் உருமாறிய வைரஸ் விகிதம் குறித்து எந்த தகவலையும் முறையாக வெளியிடவில்லை. இருப்பினும், மே மாதத்தில், உருமாறிய டெல்டா வைரஸ், மேற்கு வங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டது என்று, நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை தெரிவித்தது. மேற்கு வங்கத்தில் ஜூன் முதல் இரண்டு வாரங்களில், கிட்டத்தட்ட 90% புதிய கோவிட் -19 வழக்குகள், டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், ஜூன் நடுப்பகுதியில் தெரிவித்தார். ஜூன் தொடக்கத்தில் இருந்து இந்த அறிக்கையின்படி, நோய் பரவுவது குறித்து தமிழகத்தின் தகவல்கள் தெளிவாக இல்லை.

ஜூன் 23 நிலவரப்படி, கோவிட் -19 வகைகளை அடையாளம் காண கர்நாடகா 565 சோதனைகளை நடத்தியது, அவற்றில் 318 அல்லது 56% உருமாறிய டெல்டா வைரஸ் சேர்ந்தவை.

முதன்முதலில் மகாராஷ்டிராவில் தோன்றிய உருமாறிய டெல்டா வைரஸ், பிற வைரஸ்களை முந்தியதாக, நேச்சர் கட்டுரை தெரிவித்தது. மேற்கு வங்க டெல்லி உட்பட பல மாநிலங்களில், உருமாறிய வைரஸ் பரவியது. உலக சுகாதார நிறுவனம், டெல்டா வைரஸை ஜூன் மாத தொடக்கத்தில் "கவலைக்குரிய உருமாற்றிய வைரஸ்" என்றது. உருமாறிய டெல்டா வைரஸ், "எளிதில் பரவக்கூடிய அதன் தன்மை காரணமாக, உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி வருகிறது" என்று, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஜூன் 18 அன்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் இரண்டாவது அலையின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், வைரஸ் முழு குடும்பங்களையும் பாதிக்கிறது என்றார் சக்ரவர்த்தி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பொது சுகாதார நிபுணரும், மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநரும் மருத்துவப் பேராசிரியரும், சேவாகிராமில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளருமான எஸ்.பி.காலந்திரி, இதை ஒப்புக் கொண்டனர்: "முதல் அலையில், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகளை நாம் கண்டோம். இரண்டாம் அலையில், வைரஸ் மொத்த குடும்பத்தினரையும் அடிக்கடி பாதிக்கிறது" என்றார்.

"இரண்டாம் நிலை தாக்குதல் விகிதங்கள் [ஒரு வீடு அல்லது நெருங்கிய தொடர்புகள் போன்ற ஒரு குறிப்பிட்ட குழுவில் பாதிக்கப்படக்கூடிய நபர்களிடையே ஏற்படும் தொற்றுநோய்க்கான நிகழ்தகவு] மற்றும் வீட்டு பரிமாற்ற ஆய்வுகள்,உருமாறிய டெல்டா வைரஸ் அதிகரித்த பரிமாற்றத்தை ஆதரிக்கின்றன," என்று, ஜூன் 18 அன்று உருமாறிய டெல்டா வைரஸ் குறித்த பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து (PHE) அமைப்பின், பேரிடர் மதிப்பீட்டு அறிக்கை கூறியது.

நோய் பாதிப்பு இல்லாமல் மரணம் அதிகரிப்பதன் பின்னணியில் ஒரு காரணம், வைரஸ் முதல் அலையின் காலத்தை விட நுரையீரலை பாதிக்கிறது என்று, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் சர்வதேச இருதய அறிவியல் கழகத்தின் உள்மருத்துவ நிபுணர் அரிந்தம் பிஸ்வாஸ் கூறினார். "வைரஸ் சுமை மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் நுரையீரல் மிகவும் ஆரம்பத்தில் பாதிக்கப்படுகிறது. சைட்டோகைன் இரண்டாவது அலைகளில் பிரதானமாக உள்ளது,"என்று, இந்தியாஸ்பெண்டிடம் பிஸ்வாஸ் தெரிவித்தார்.

உருமாறிய ஆல்பா வைரசுடன் ஒப்பிடும்போது, டெல்டா மாறுபாடு உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சேர்க்கும் ஆபத்து ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்தது, ஸ்காட்லாந்து அரசாங்கத்தின் கோவிட் -19 ஆலோசனைக் குழு உறுப்பினர்களால், ஏப்ரல் 1 முதல் ஜூன் 6, 2021 வரை கோவிட் -19 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் முடிவை, ஜூன் 14 அன்று தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

ஆனால் கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு அதிகரிப்பதில், உருமாற்றிய டெல்டா வைரஸ், ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பொதுவெளியில் கிடைக்கக்கூடிய தொடர்புடைய தகவல்கள் இல்லாததால், தற்போதைக்கு எந்த பதிலும் இல்லை என்று, நிபுணர்கள் தெரிவித்தனர்.

"இப்போது மேற்கு வங்காளத்தில் ஆதிக்கம் செலுத்தும் உருமாறிய டெல்டா வைரஸ், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பிட்ட விகாரங்களின் தாக்கம் குறித்து ஏதேனும் யோசனை பெற, அந்த மாநிலங்களில் உள்ள வைரஸ் விகிதாச்சாரத்துடன், அந்த மாநிலங்களில் இருந்து நாள்பட்ட நோய்பாதிப்பு தொடர்பான தரவு வைக்கப்பட வேண்டும்" என்று, கல்யாணியில் உள்ள தேசிய உயிரியல் மருத்துவ மரபியல் நிறுவனத்தின் (என்ஐபிஜி) இயக்குநரும், நுண்ணுயிரியலாளருமான சவுமித்ரா தாஸ் கூறினார்.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் தங்களது அன்றாட சுகாதார அறிக்கைகளில், நாள்பட்ட நோய் தொடர்பான தரவுகளை வெளியிடவில்லை என்பதால், அவற்றை மேற்கு வங்கத்துடன் ஒப்பிடுவதற்கான வாய்ப்பே இல்லை.

வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளின் தாக்கங்களுக்குப் பின்னால் உள்ளார்ந்த குழுக்களில் மரபணுக்களின் பங்கு இருக்கக்கூடும் என்று, தாஸ் கூறினார். ஆனால் இதைப் பற்றி எந்தவொரு புரிதலுக்கும் போதுமான தகவல்கள் அல்லது ஆராய்ச்சி பொதுவில் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட் -19 இறப்புகளில், நாள்பட்ட நோய் இல்லாத நோயாளிகளின் பங்களிப்பு அதிகரிப்பது தொடர்பான தரவுகளை, குறிப்பிட்ட மாநிலங்களில் வைரஸின் வெவ்வேறு வகைகளின் விகிதாச்சாரத்துடன் பார்க்க வேண்டும், என்று சென்னையைச் சேர்ந்த வைராலஜிஸ்ட் டி. ஜேக்கப் ஜான் தெரிவித்தார். "நோய்பாதிப்பு இல்லாத இறப்புகளில், மேற்கு வங்காளத்தின் அதிக பங்கு, மற்றும் தமிழகத்துடனான வித்தியாசம் ஆகியன புதிரானவை. ஆனால் வெவ்வேறு மாநிலங்களால் வழங்கப்பட்ட தரவுகளில், சீரான தன்மை இல்லாததாலும், பொதுகளத்தில் பொதுவான தகவல்கள் இல்லாததாலும், இந்த எழுச்சிக்கு என்ன காரணம் என்று விளக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்று மதிப்பிடுவதற்கு, இந்த மாநிலங்களில் உள்ள வைரஸ் விகிதத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த மாநிலத்தில் எந்த விகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது நமக்கு தெரியும், ஆனால் அதன் விகிதம் நமக்கு தெரியாது," என்று, இந்தியாஸ்பெண்டிடம் ஜான் தெரிவித்தார்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கான இந்தியாவின் நோடல் சுகாதார அமைப்பான மத்திய சுகாதார அமைச்சகத்தின், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR - ஐ.சி.எம்.ஆர்), தேசிய அளவில் நாள்பட்ட நோய் உடையவர்கள் தொடர்பான தரவுகளை வெளியிட்டிருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் அனைத்து மாநிலங்களிடமும் இந்த தகவலை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முதல் அலையின் போது, நாள்பட்ட நோய் இல்லாமல் மரணத்தின் பங்கு குறித்த தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் அவர்களிடம் உள்ளதா, இரண்டாவதாக, ஒரு சீரான வழியில் தரவை வழங்க மாநிலத்திடம் கேட்கவும், மாநில வாரியான பங்கு பற்றி கேட்டறிவது ஐ.சி.எம்.ஆருக்கு இது சாத்தியமா என்று, ஜூன் 23 அன்று, இந்தியாஸ்பெண்ட் ஐ.சி.எம்.ஆர் தரப்புக்கு மின்னஞ்சல் மூலம் கருத்து கேட்டது. ஆனால் ஜூன் 27 மதியம் வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவர்கள் பதில் அளித்தால் இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

இந்த தொடர்புடைய தரவுகளின் பற்றாக்குறை, தற்போது மூன்று மாநிலங்களில் இருந்து வரும் நோய் தொடர்பான புள்ளிவிவரங்களை நன்கு பயன்படுத்துவதற்கு, தடையாக இருக்கும் என்று, கல்யாணியின் தேசிய பயோமெடிக்கல் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிடியூட் (என்ஐபிஜி) இன் பேராசிரியர் பார்த்தா பி. மஜும்தார் கூறினார். "இங்கிருந்து முன்னேற, வேறு சில தொடர்புடைய அம்சங்களைப் பற்றிய தரவை நாங்கள் அணுக வேண்டும்" என்று இந்திய அரசின் தேசிய அறிவியல் தலைவராகவும் உள்ள மஜும்தார் கூறினார். "எடுத்துக்காட்டாக, உருமாறிய டெல்டா வைரஸ், மிக வேகமாக பரவுகிறது என்பதை நாம் அறிவோம், ஆனால், உருமாறியது மேலும் ஆபத்தானது என்பதற்கு இன்னும் எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.

மேற்கு வங்கத்தில், நோய் இல்லாதவர்களுக்கான மரணத்தின் அதிக பங்கில் உருமாறிய டெல்டா வைரசுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள மாறுபாடுகளின் விகிதம் தொடர்பான புள்ளிவிவரங்கள் தேவை என்று மஜும்தார் கூறினார். "ஆனால் அத்தகைய தகவல்கள் வெளியிடப்பட்ட வடிவத்தில் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Next Story